தேனி மாவட்ட புதிரை வண்ணார் இன மக்கள் கூறும் "புதிரை வண்ணார்" சாதிக்கான பெயர் காரணம். பல வருடங்களுக்கு முன் புதிரை வண்ணார் இனத்தை சேர்ந்த ஒருவரை போலீசார் விரட்டி வந்துள்ளனர். அப்பொழுது அவர் அருகில் இருந்த ஒருவரிடம் புதர் போல் செடி அடர்திருந்த இடத்தை காட்டி நான் இந்த இடத்தில் ஒளிந்து கொள்கிறேன் போலீசார் கேட்டால் தெரியவில்லை என்று கூறிவிடுங்கள் என்று கூறி அதில் சென்று ஒளிந்து கொண்டார். ஆனால் போலீசார் வந்தவுடன் அருகில் இருந்தவர் போலீசாரிடம், நேரடியாக ஒளிந்திருந்த இடத்தை காட்டாமல் முள்ளும் புதரும் முள்ளும் புதரும் என்று மறைமுகமாக கூறி அவர் ஒளிந்திருந்த இடத்தை காட்டி பிடித்து கொடுத்துள்ளார். புதரில் சென்று ஒளிந்து மாட்டி கொண்டதால் அன்றிலிருந்து இவ்வினத்திர்க்கு "புதிரை வண்ணார்" என்று பெயர்வந்ததாக கூறுகின்றனர்.
Friday, 23 March 2012
Saturday, 10 March 2012
ஏகாலி என்றால்
புதிரை வண்ணார்,கிராமங்களில் ஏகாலி என்றும் அழைக்கப்பட்டனர், எப்பொழுதும் கழுதை கைத்தடியுடன் இருந்ததினால் இவ்வாறு அழைக்கப்பட்டனர்.அதாவது கழுதையின் நான்கு கால்கள், அந்த தொழிலாளியின் இரண்டுகால்கள்,அவரது கைத்தடி ஆகியவற்றின் காரணப்பெயர்தான் ஏகாலி.
புதிரை வண்ணார் நல வாரியம்
- விபரம்:
- வருகை: 409
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரின் துணிகளைச் சலவை செய்து கொடுத்தல், அவர்களின் பிற தேவைகளை செய்து கொடுத்தல் போன்ற தொழில்களைச் செய்யும் சமுதாயத்தினராக, தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களிலும் ஒடுக்கப்பட்டவர்களாக புதிரை வண்ணான் சமுதாயத்தினர் இருந்தனர். இந்த சமுதாயத்தினர் சமூக, பொருளாதார நிலைகளில் இன்னும் தாழ்ந்த நிலையிலேயே இருந்து வருகின்றனர்.
புதிரை வண்ணார் நல வாரியம்
தமிழ்நாடு அரசு தற்போது புதிரை வண்ணார் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரியம் எனும் பெயரில் தனி வாரியம் ஒன்றை அமைத்துள்ளது. இதில்
தலைவர்
புதிரை வண்ணார் நல வாரியம்
தமிழ்நாடு அரசு தற்போது புதிரை வண்ணார் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரியம் எனும் பெயரில் தனி வாரியம் ஒன்றை அமைத்துள்ளது. இதில்
தலைவர்
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அமைச்சர்
உறுப்பினர்கள்
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைச் செயலாளர்
- நிதித்துறைச் செயலாளர்
- நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர்
- ஊரகவளர்ச்சித் துறைச் செயலாளர்
- தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறைச் செயலாளர்
- சுகாதாரத் துறைச் செயலாளர்
- பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர்
- பழங்குடியினர் நலத்துறை, தாட்கோ மேலாண் இயக்குநர்
- பேரூராட்சி ஆணையர்
-ஆகியோர் அலுவல் சார்ந்த உறுப்பினர்களாக இருப்பார்கள்.
வாரியப் பணிகள்
வாரியப் பணிகள்
- இச்சமுதாய மக்களின் கல்வி அறிவுநிலை பின்தங்கிய நிலையில் உள்ளதை கணக்கில் கொண்டு இவ்வினத்தை சேர்ந்த அனைத்துக் குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்தல்.
- இச்சமுதாய மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா, தொகுப்பு வீடுகள் கட்டித்தருதல், பொருளாதார திட்டங்களை மானியத்துடன் தருதல் உள்பட பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள் இவ்வாரியம் மூலம் செயல்படுத்தப்படும்.
- புதிரை வண்ணார் இன மக்களின் முன்னேற்றத்துக்காக அரசு மூலம் வழங்கப்படும் அனைத்து நலத்திட்டங்களும் மற்றும் உதவிகளும் சிறப்பான முறையில் தங்கு தடையின்றி கிடைப்பதற்கும் இதனை கண்காணிக்கும் வகையில் இவ்வாரியம் செயல்படும்.
பாதிராவு வண்ணார்மற்றும் மனோவியல் மருத்துவர்
புதிரை வண்ணார் என்ற பாதிராவு வண்ணார் தலித்.மற்றும் பழங்குடி மக்களுக்கான சிறப்புக்கூறு திட்டங்களை வடிவமைத்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பி.எஸ்.கிருஷ்ணன் அவர்களை, அருட்தந்தை குமார் அவர்களோடு நேற்று காலை சந்தித்தேன்.
புதிரை வண்ணார் என்ற தலித் சாதியின் உண்மையான பெயர் பாதிராவு வண்ணார் என்று கிருஷ்ணன் விளக்கினார்.பாதி ராத்திரியில் மட்டும் நடமாட வேண்டும் என் விதிக்கப்பட்டவர்கள் எனவும் சொன்னார். கிராமங்களில் இவர்கள் ஏகாலி என்றும் அழைக்கப்பட்டனர், கழுதையின் நான்கு கால்கள்,அந்த தொழிலாளியின் இரண்டுகால்கள்,அவரது கைத்தடி ஆகியவற்றின் காரணப்பெயர்தான் ஏகாலி என குமார் விளக்கினார்.
அதை கேட்டதில் இருந்து எத்தகைய கொடூரமான சமூகத்தில் வாழ்கிறோம் எனற அதிர்ச்சியில் அதிர்ந்த மனமும் உடலும் இன்னமும் அடங்கவில்லை.
ஐந்து வயதில் ராமநாதபுரம் கடலாடி கிராமத்தில் எனது பாசத்துக்குரிய அய்யம்மா வின் வாயிலிருந்து அந்த ஏகாலியை கேட்டேன்.இத்தனை ஆண்டுகாலத்திற்கு பிறகு அர்த்தம் தெரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது. இறந்து போன பாசத்துக்குரியவர்கள் மீதும் கோபப்பட வைக்கும் சாதீயம். இந்திய பண்பாட்டின் புனிதத்தை மட்டும் பேசும் இந்துத்வா பயங்கரவாதிகளையும்,இந்திய சாதியத்தை கண்டுகொள்ளாமலே முற்போக்கு பேசுபவர்களையும்,என்ன செய்யலாம்? http://centre-niyayan.blogspot.com/
[தொகு]மனோவியல் மருத்துவர்
"புதிரை வண்ணார் எனப்படும் சாதியினர் இன்றளவும் பேய் விரட்டும் தொழிலை செய்துவருகின்றனர். தான் பேயினால்தான் தாக்குதலுக்குள்ளானேன் என்று நம்புவர்கள் பேய் விரட்டும் நிகழ்ச்சி செய்தவுடன் அந்நோயிலிருந்து குணமடைந்ததாக உணருகின்றனர். இது அறிவியலா அல்லது மூடநம்பிக்கையா என்பது இவ்விடத்தில் விவாதிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் பேய்விரட்டப்பட்டதால் நோய் ஒழிந்துவிட்டதாக உணருகின்ற காரணத்தினால் பேய்விரட்டும் புதிரை வண்ணார் இவ்விடத்தில் மனோவியல் மருத்துவராக செயல்படுவதைக் காணமுடிகிறது." [1]
புதிரை வண்ணார்களாக்கப்பட்ட பூர்வீக வண்ணக் கலைஞர்கள்!
‘சக்கிலியனைத் தொட்டால் தீட்டு, புதிரை வண்ணானைப் பார்த்தாலே தீட்டு’ என்கிறது ஒரு சொல் வழக்கு. இது மாதிரியான சாதியச் சொல் வழக்குகளை உருவாக்கியதும் அதைப் பின்பற்றுவதும் ஆதிக்க சாதியினரே என்றாலும், குறிப்பிட்ட இந்த சொல் வழக்கு தலித்துகளாலும் பயன்படுத்தப்படுவதுதான் வேதனையின் உச்சம். ‘காலம் மாறிப் போச்சு! இப்பல்லாம் யாருங்க ஜாதி பாக்குறாங்க’ என்ற புளுகுக்கும், ‘ஜாதியால கஷ்டப்படுற தலித்துகளே ஜாதி பார்ப்பாங்களா?’ என்ற சப்பைக் கட்டுக்கும் பெரிய வேறுபாடு ஒன்றுமில்லை. தலித் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஊர்களில், ஒன்றிரண்டு குடும்பங்களாக வாழ்ந்து ஊர்தோறும், சேரிதோறும் சாதிய சவுக்கடிகளை வாங்கியபடி வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள் புதிரை வண்ணார்கள்.

இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகில் உள்ள திருத்தங்கலில் சுமார் ஆயிரம் புதிரை வண்ணார் குடும்பங்கள் வசிக்கின்றன என்ற தகவல், நம்முள் வியப்பை ஏற்படுத்தியது. சாதியின் அழுத்தத்தையும் அடக்குமுறையையும் தாங்க முடியாமல் சொந்த மண்ணை விட்டு ஓடி வந்தவர்கள், வேலைவாய்ப்பு நகரமான சிவகாசி அருகில் உள்ள திருத்தங்கலிலும் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் குடியிருக்கத் தொடங்கி, இன்று அவர்களுடைய எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. அதோடு மட்டுமின்றி, புதிரை வண்ணார்களின் குலத் தொழிலாகக் கருதப்படும் துணி வெளுத்தல், சவரம் செய்தல், பிணத்தைக் கழுவுதல் போன்றவைகளைச் செய்ய மறுத்த திருத்தங்கல் புதிரை வண்ணார்களில் பெரும்பான்மையானோர் பட்டாசுத் தொழில் மற்றும் விவசாய வேலைகளில் ஈடுபடுகின்றனர்.
கல்வியறிவு பெற்றவர்கள் ஆசிரியர் பணியிலும் இருக்கிறார்கள். இதில் குறிப்பிடத் தகுந்த விஷயம் என்னவென்றால், திருத்தங்கலில் இருக்கும் எல்லா குழந்தைகளுமே பள்ளிக்கூடம் செல்கின்றன. இதிலென்ன ஆச்சர்யம் என சிந்திக்கிறவர்கள், புதிரை வண்ணார்களின் வாழ்நிலை அவலத்தையும் அவர்கள் காலங்காலமாக அனுபவித்து வரும் சாதிய ஒடுக்குமுறைகளையும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
பள்ளர், பறையர் மற்றும் அருந்ததியர்கள் ஆதிக்க சாதியினருக்கு அடிமைத் தொழில் செய்கிறார்கள். அந்த அத்தனை அடிமை வேலைகளையும் தலித்துகளுக்கு செய்வதே புதிரை வண்ணார்களின் வேலை. ஊர் முழுவதும் சுற்றி மூட்டை மூட்டையாக அழுக்குத் துணிகளை எடுத்து வந்து, பளிச்சென வெளுத்துக் கொடுத்தாலும் கூலி என்று எதுவும் இவர்களுக்கு கிடைக்காது. பழைய கஞ்சி கொடுத்தால் அதுவே பெரிய விஷயம். தவிர, தலித் மக்களுக்கு சவரம் செய்ய வேண்டியது புதிரை வண்ணார்களின் ‘சமூகக் கடமை'(!) தலித் மக்களின் பிணத்தை குளிப்பாட்ட வேண்டியது புதிரை வண்ணார்கள் மறுக்கக் கூடாத ‘பொறுப்பு.' பள்ளப்பய, பறப்பய, சக்கிலியப்பய என சாதிப் பெயர்களால் தலித்துகள் தாழ்த்தப்படுவது போல, ‘புதரப்பய' என்ற சொல், தலித்துகள் மத்தியில் மிகச் சாதாரணமாகப் புழக்கத்தில் உள்ளது.
நெல்லை மாவட்டம் இளைச்சநேந்தலில் இருந்து வந்து திருத்தங்கலில் குடியேறியிருக்கும் அருள்ராஜ், ‘ஒரு மனுசன் செத்துப் போயிட்டாங்கறத எத வச்சு கண்டு பிடிப்பீங்க? கண்ணு வெளிய தள்ளிறும். மலம் வெளியேறும். எங்க வேலை அத சோதிச்சு, சுத்தம் செய்றது; பிணத்தை சவரஞ் செஞ்சு, பாடை தூக்கி எல்லா வேலையும் செய்யணும். பொம்பளைங்க வயசுக்கு வர்றப்ப உடுத்துற துணிய முட்டுத் துணினு சொல்வோம். ரத்தக் கறையோட இருக்குற துணியை வண்ணான் தான் துவைக்கணுங்கறது சம்பிரதாயம். எங்க ஊர்ல எங்க அம்மா, அப்பா எல்லாம் இந்தத் தொழிலைதான் செஞ்சுட்டிருந்தாங்க. நான் பள்ளிக்கூடம் போய் படிச்சதால என்னால அந்த வேலைய பார்க்க முடியல. மாட்டேனு சொன்னதுக்கு வண்ணானுக்கு அவ்ளோ திமிரானு எதுத்தாங்க. நாங்க ஊரவிட்டு காலி பண்ணி இங்க வந்துட்டோம். இப்போ எங்க குடும்பத்துல யாரும் இந்த தொழில் பார்க்கல’ என்கிறார். அருள்ராஜ், தற்போது திருத்தங்கலில் இருக்கும் ‘புதிரை வண்ணார் முன்னேற்ற சங்க'த்தின் செயலாளர்.
சாதி ஒடுக்குமுறைகளைத் தாங்க முடியாமல் ஊரைவிட்டு ஓடி வந்தாலும், காற்றைப் போல எங்கும் நிறைந்திருக்கும் சாதியின் பிடியிலிருந்து அவ்வளவு எளிதாகத் தப்பித்துவிட முடியுமா என்ன? திருத்தங்கலில் இருக்கும் புதிரை வண்ணார் வகுப்பைச் சேர்ந்த ஒவ்வொரு குழந்தையும் சந்திக்கும் முக்கியமான பிரச்சனை சாதிச் சான்றிதழ். ‘புதிரை வண்ணார் என்ற சாதியே கிடையாது’ என மறுப்பது அதிகாரிகளின் வழக்கமாக இருக்கிறது. ‘வண்ணானுக்கு கழுதை இருக்கணும், துணி மூட்டை இருக்கணும், கார வீட்ல இருக் கிறவனுக்கும், தங்கச் சங்கிலி போட்டிருக்கவனுக்கும் எப்படி ஜாதி சர்டிபிகேட் குடுக்கறது?'ன்னு சிவகாசி தாலுகா ஆபீஸ்ல அதிகாரி கேக்குறாங்க. நான் கேக்குறேங்க, எல்லா ஜாதிக்காரங்களும் அவங்களோட குலத் தொழிலதான் செய்யுறாங்களா? பாப்பானுங்க பூசாரி வேலைய மட்டும்தான் பாக்குறாங்களா என்ன? அவங்கள போய் நீ குடுமி வெக்கல, கற்பூரம் தட்டு இருக்கா வீட்லனு இதே அதிகாரிங்க கேப்பாங்களா?’ என்று ஆதங்கத்தோடு கேட்கிறார் அருள்ராஜ்.
புதிரை வண்ணார்கள் தங்கச் சங்கிலி போட்டிருந்தாலும், அவர்களுடைய சாதியை பிறப்புதானே தீர்மானித்திருக்கிறது. அவர்கள் வீட்டில் கழுதை இல்லை எனினும், இந்த சமூகம் அவர்களை புதிரை வண்ணாராகத்தானே அங்கீகரித்திருக்கிறது? இதே சமூக அங்கீகாரத்தை சட்ட ரீதியாக (சாதி சான்றிதழ்) கொடுத்தால்தான், சில உரிமைகளைப் பெற முடியும் என்று கோரினால், அதற்கு இந்த சமூகமும் அரசும் திமிரோடு கேட்கும் கேள்வி : ‘நீ தான் தங்கச் சங்கிலி போட்டிருக்கியே; கழுதை வளர்க்கலையே'. நாமும் இந்து சமூகத்திடமும் அரசாங்கத்திடமும் அதைத்தான் சொல்கிறோம், வலியுறுத்துகிறோம்
பிறப்பால் புதிரை வண்ணார்களாக்கப்பட்ட ஆனால் கழுதையில்லாத, தங்கச் சங்கிலி அணிந்திருக்கின்றவர்களை ‘மேல் ஜாதி'க்காரன் என்று அங்கீகரி. அதற்குத் துப்பில்லாத வரை, அவர்கள் அய்.ஏ.எஸ். அதிகாரிகளாகப் பதவி வகித்தாலும், அவர்களுக்கும் அவர்களுடைய குழந்தைகளுக்கும் சட்டப்படி சாதிச் சான்றிதழ் கொடு. சமூக நீதி பற்றி வாய்கிழிய பேசும் தி.மு.க. அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும். 69 சதவிகித இடஒதுக்கீட்டைப் பற்றி பேசுவது மட்டுமே சமூகநீதி அல்ல. திருத்தங்கல்லில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் பெரும் போராட்டத்துக்குப் பின்னரே சாதிச் சான்றிதழ் பெற்று பள்ளிக்குச் செல்கின்றன. பெரும்பான்மையாக இருந்து, ஏதோ சங்கம், முன்னேற்றம் என்று இருக்கிற இடத்திலேயே இப்படி என்றால், ஓரிரு குடும்பங்கள் இருக்கிற ஊர்களில் என்ன நடக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.
‘ஏதோ இங்க கொஞ்சம் படிச்சவங்களும் விழிப்புணர்வும் இருக்குறதுனால இதெல்லாம் பேச முடியுதுங்க. மத்த இடத்துல இதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை. எங்க ஊரு கீழ முடிமன்னார்கோட்டை. அங்க பறையருங்க மெஜாரிட்டி. அவுங்களுக்கு நாங்க அடிமை வேலை பார்த்துட்டிருந்தோம். அப்போ எல்லோருக்கும் பட்டா வீடு கொடுத்தாங்க. நாங்க 15 குடும்பம் இருந்தோம். எங்களுக்கும் பட்டா வீடு குடுங்கன்னு கேட்டதுக்கு, நீங்க ஊருக்குள்ளயா இருக்கிறீங்க? வெளிலதான இருக்கீங்க... தர முடியாதுனு சொல்லிட்டாங்க. எங்களுக்கும் வீடு வேணும்னு தகராறு பண்ணோம். உடனே பறையருங்க எங்கள அடிக்க வந்தாங்க. அந்தப் பிரச்னைல ஊரவிட்டு ஓடி வந்து, இதோ இப்ப வரைக்கும் அந்த ஊரு பக்கமே போகல’ என்கிறார் கமுதி சுப்பையா.
‘புத்த களம்' என்ற அமைப்பின் கீழ் புதிரை வண்ணார்களை ஒன்று திரட்டும் பணியில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் இவர், ‘தலித்துகளுக்கு எல்லா உரிமையும் சாதி சான்றிதழ் அடிப்படையிலதான் குடுக்குறாங்க. விதியேனு இந்தத் தொழில பார்க்காம, படிச்சு முன்னேறணும்னு நினைக்கிறவங்களுக்கு சாதிச் சான்றிதழை கொடுக்கணுமா இல்லையா? நாங்க வண்ணார் இல்லேன்னா யாருனு சொல்லுங்க? பொன்னு பொருளோட நாங்க மாட மாளிகைலயா குடியிருக்கோம்? நாள் பூரா உழைச்சுட்டு, உழைப்புக்கேத்த கூலி கிடைக்காம, அம்மா தாயேனு பிச்சை மாதிரி கஞ்சி வாங்கிக் குடிக்கிறவங்க. லட்சக்கணக்குல பணத்தை கட்டி தனியார் பள்ளிக்கூடத்துலயா படிக்க வைக்க முடியும்?
அரசுப் பள்ளியில சாதிச் சான்றிதழ் கேக்குறாங்க. ஒரு தடவை ரெண்டு தடவை முயற்சி பண்ணிட்டு மறுபடியும் வெளுக்குற தொழிலுக்கே போயிடுறவங்க அதிகம். ‘பள்ளர், பறையர், அருந்ததியர்னு இவங்க மட்டும்தான் தலித்துகளா? இடஒதுக்கீட்டுல ஆரம்பிச்சு கிடைக்கிற உரிமைகள் எல்லாத்தையும் அவங்களே பிரிச்சுக்குறாங்க. மீதமுள்ள உதிரி சாதிகள் என்ன செய்றது? ஆதிக்க சாதிகள் செய்றது மாதிரி எங்களை ஒடுக்கி, உழைப்பை உறிஞ்சுறது மட்டுமில்லாம, எங்களோட உரிமைகளையும் சூறையாடுறாங்க. சமூக விடுதலையில், ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் பணியில் எங்களையும் இணைச்சுக்கங்க என்பதுதான் எங்களோட ஒரே கோரிக்கை. அப்படி ஒண்ணு சேர்ந்துட்டா, நீங்க எங்களுக்காகவும் நாங்க உங்களுக்காகவும் இருப்போம். அப்போ நம்ம அணி இன்னும் வலுவானதா இருக்கும்’ என்கிறார் கமுதி சுப்பையா.
அவர் சொல்வது போல எந்த தலித் அமைப்புகளும், கட்சியும் புதிரை வண்ணார்களைத் திரட்டுவதில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. சங்கரன்கோயில் அருகில் உள்ள துரைசாமிபுரத்தில் இருந்து திருத்தங்கலுக்கு திருமணம் முடித்து வந்திருக்கும் சந்தனமாரி, ‘நாங்க இப்போ வெளுக்குற தொழில் செய்றதில்லங்க. அதனால யாரு வீட்டுக்கும் சோறு வாங்கப் போறதில்லை. சட்டியைத் தூக்கிட்டு ஒவ்வொரு வீட்லயும் போய், அம்மா வண்ணாத்தி வந்துருக்கேன் கஞ்சி ஊத்துங்கனு நிக்கும்போது அவமானமா இருக்குது. ‘ஒழுங்கா வெளுக்கத் தெரியாது, கஞ்சிக்கு மட்டும் வந்துருவீங்களே'ன்னு பேசுவாங்க. கஞ்சி வாங்க போக மாட்டேனு அடம் பிடிச்சாலும் அப்புறம் பசி வந்ததும் என்ன செய்யுறது? நாங்க செய்யற வேலைக்கு கூலி கிடைக்காது. வீட்ல சமைக்கிறதுக்கு சாமானோ, பொருளோ இருக்காது. அவங்க நஞ்சதோ, நொஞ்சதோ எதப் போட்டாலும் திங்கணும். இந்த ஊருக்கு வந்ததுக்கு அப்புறம்தான் வீட்டுல சமைக்கிறோம்’ என்கிறார் நிம்மதியாக.
உடுத்துவதற்கு ஓர் ஆடையும் சோறு வாங்க வைத்திருக்கும் ஒரு சில பாத்திரங்களும் தவிர, எதுவும் சொந்தமில்லாத புதிரை வண்ணார்கள், திருத்தங்கலில் தாங்களே பணம் சேர்த்து சமூகக் கூடம் கட்டியிருக்கிறார்கள். திருமணம், திருவிழா, கூட்டங்கள் மாதிரியான நிகழ்வுகளுக்கு இது பயன்படுகிறது. ஆனால், அதற்கும் பல சோதனைகள் வந்தது என்கிறார் புதிரை வண்ணார் முன்னேற்ற சங்கத்தின் தலைவரான ஓய்வு பெற்ற ஆசிரியர் முத்து. ‘புதிரை வண்ணார்னா எல்லோரும் கேவலமா பேசுறாங்க. ‘புதிர' என்றால் ‘பூர்வீகம்'னு தமிழ் அகராதி சொல்லுது. ‘வண்ணான்' என்றால் வண்ணம் தீட்டுபவர், வண்ணக் கலைஞர்.

அந்தக் காலத்தில் துணிகளுக்கு வண்ணம் தீட்டும் வேலையைத் தான் நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தோம். சாதி வந்த பின் அழுக்குத் துணியையும் முட்டுத் துணியையும் துவைப்பது, எங்களுக்கு விதிக்கப்பட்டது. சவரத் தொழில், பிணம் கழுவுதல் போன்றவை எங்கள் மீது திணிக்கப்பட்ட தொழில்கள். ‘வண்ணான் கழுதை பொதி சுமக்கும்' என பாடப் புத்தகங்களே ஜாதியை போதிக்குது. பள்ளிக்கூடத்துல பசங்க கிண்டல் பண்ணுவாங்க. உங்க வீட்டு சோறு மட்டும் ஏன் கலர் கலரா இருக்குனு கேப்பாங்க. நாங்க யாரு கூடவும் சேர மாட்டோம்’ என்கிறார் வேதனையாக.
அத்தனை அடக்குமுறைகளையும் கடந்து படித்து ஆசிரியர் பணியில் சேர்ந்ததோடு, குழந்தைகளை தேடித் தேடி பள்ளியில் சேர்த்துக் கொண்டிருக்கிறார் முத்து. ‘படிப்பு ஓரளவுக்கு கவுரவமா வாழ வைக்குதுங்கறதால, எங்க சமூகப் பிள்ளைகளுக்குப் போராடி சாதிச் சான்றிதழ் வாங்கி படிக்க வச்சுட்டு இருக்கோம். ஆனா சாதியை உதறிட்டு வெளியே வர கல்வி மட்டும் போதாதுங்கறதுதான் என்னோட அனுபவம். எந்த சமூக அறிவும் இல்லாத அன்றைக்கு ஒதுக்கப்பட்டோம். ஓரளவு விழிப்புணர்வு அடைஞ்ச பிறகு, இன்றைக்கும் ஒடுக்கப்படு றோம். அவங்க சரியில்ல, இவங்க சரியில்லன்னு சொல்றத விட்டுட்டு சாதியை அழிக்க எல்லாருமே பாடுபடணும்’ என்கிறார்.
அவரவர் ஊரில் நடந்த வன்கொடுமைகளை சகிக்க மாட்டாமல் திருத்தங்கலில் வந்து குடியேறியபோதும், சாதி தன்னிலிருந்து புதிரை வண்ணார்களை விடுவித்து விடவில்லை. சாதி சான்றிதழ், இரட்டை டம்ளர், இழி தொழில் என எல்லாமே இங்கும் இருக்கிறது. தலித் மக்கள் கல்வியறிவு பெற்றால் சாதி ஒழிந்துவிடும் என்றால், இந்நேரத்துக்கு ஓரளவுக்கு ஒழிந்திருக்க வேண்டும். அரசியல் அதிகாரம், தலித் விடுதலைக்கு வழிவகுக்கும் என்றால், இந்நேரத்துக்கு வகுத்திருக்க வேண்டும். இடஒதுக்கீட்டாலும் புரட்சி மலர்ந்துவிடவில்லை. சட்டத்தால் சாதியை புதிதாக ஆக்கவும் முடியாது, அழிக்கவும் முடியாது என்பதே உண்மை. இடஒதுக்கீடு தலித் விடுதலைக்கு ஓரளவுக்கு வலு சேர்க்கலாம்; ஒரு சில உரிமைகளை கைப்பற்ற வழிவகுக்கலாம். ஆனால், சாதியை முற்றிலுமாக ஒழித்துவிடுமா என்றால் இல்லை என்பதே ஆணித்தரமான ஒரே பதில்.
நமது போராட்டங்களும், கவனமும், உழைப்பும் இந்த உரிமைகளைப் பெறுவதிலேயே செலவிடப்படுகின்றன. ஆனால், தலித் மக்களின் அத்தனைப் பிரச்சனைகளுக்கும் காரணம், இந்து சமூக அமைப்பு தான் என்ற புரிதல் இங்கு இன்றளவும் வளர்த்தெடுக்கப்படவில்லை. அம்பேத்கரோடும், பெரியாரோடும் அந்தப் பிரச்சாரம் முற்றுப் பெற்று விட்டது. சில ஆதாயங்களுக்காக நாம் செய்து கொள்ளும் சமரசங்கள், இந்து அமைப்பை இன்னும் ஆழமாகவும் நீளமாகவும் வளர வழி செய்து கொண்டிருக்கின்றன. தனக்கு விடுதலை வேண்டும் என்று நினைக்கிற ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய முதல் கடமை, இந்து சமூக அமைப்பையும் அதன் வெளிப்பாடுகளையும் எதிர்ப்பதுதான். இந்து மதத்தை விட்டு வெளியேற வேண்டும் என்பதற்குப் பொருள் சான்றிதழ்களில் இந்து என்கிற இடத்தை, பவுத்தம் கிறித்துவர், முஸ்லிம் என்று நிரப்புவது மட்டும் அல்ல; இந்து மதம் நம் வாழ்க்கையோடு, உணர்வோடு, நம்பிக்கைகளோடு இரண்டறக் கலந்திருக்கிறது. மனதளவில், சிந்தனையளவில் நாம் அதிலிருந்து பளிச்சென விடுபட்டாக வேண்டும். அப்போதுதான் சாதியின் அடித்தளம் ஆட்டம் காணும்.
திருத்தங்கலில் ஒன்று சேர்ந்திருக்கும் புதிரை வண்ணார்களின் பிரச்சனைகள் மட்டுமல்ல; ஒட்டுமொத்த தலித் மக்களின் பிரச்சனைகளும், போராட்டங்களும் வெறும் சாதிச் சான்றிதழுக்காகவும் வீட்டுமனைப் பட்டாவுக்குமாக திசை திருப்பப்படுகின்றன. தலித் மக்களின் கல்விக்கும், பொருளாதாரத்துக்கும் ஓரளவு கவுரவமான வாழ்வுக்கும் இடஒதுக்கீடு வழி செய்கிறது. ஆனால், ஒட்டுமொத்த சமூக அங்கீகாரத்தையும், சுயமரி யாதையையும் அது கொடுத்து விடாது.
உண்மையில் தலித் மக்களின் போராட்டங்கள், ஜனநாயகத்துக்கானது. இந்த சமூகத்தை, மனிதர்களைப் பண்படுத்தும் பணியில் தலித் மக்கள் இரண்டாயிரம் ஆண்டுகளாக ஈடுபட்டிருக்கிறார்கள். ‘நான் அடிமை இல்லை’ என்ற போர்க் குரல் ‘யாரும் யாருக்கும் அடிமையல்ல’ என்ற சமத்துவக் கொள்கையையே வலியுறுத்துகிறது. இந்த சமூகத்தில் சமத்துவத்தை மலரச் செய்வதற்காகவே அவர்கள் வன்கொடுமைகளை சந்திக்கிறார்கள்; செத்து மடிகிறார்கள். ஓர் அடிமையின் அடிப்படைக் கோரிக்கை என்னவாக இருக்கும்? அடிமைத்தனத்திலிருந்து விடுபடுவதுதானே! நீங்கள் கோடி ரூபாய் கொடுத்தாலும், சுதந்திரத்திற்கும் சுயமரியாதைக்கும் அது ஈடாகுமா?
இனவெறி, பெண்ணடிமைத்தனம், முதலாளித்துவம், ஏகாதிபத்தியம் என உலகின் எந்த அடிமைத்தனத்தை விடவும் வலுவானது, கொடுமையானது சாதியப் பாகுபாடு. காரணம், அதில் மேற்குறிப்பிடப்பட்ட எல்லா பாகுபாடுகளுமே உள்ளடங்கி விடுகிறது என்பதே உண்மை. சாதி இனப் பிரச்சனைதான்; சாதி பெண்களின் பிரச்சனைதான்; சாதி ஏழைகளின் பிரச்சனைதான். ஆனால் இனவெறியோ, பெண்ணடிமைத்தனமோ, ஏழைகளின் பிரச்சனையோ சாதிக் கொடுமையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஏற்றத் தாழ்வை உயிர் மூச்சாகக் கொண்டுள்ள சாதியத்தை நிலைநிறுத்தும் கோட்பாட்டை அழித்தொழித்து, ஜனநாயகத்தை முன்மொழிந்து -இம்மக்களை மானமும் அறிவும் உள்ள சமத்துவமிக்க மக்களாக மாற்றும் வரலாற்றுக் கடமையில் தலித்துகள் ஈடுபட்டிருக்கின்றனர். புதிரை வண்ணார்களின் போராட்டமும் அதற்கானதே!
-மீனா மயில்
Thursday, 8 March 2012
சாதி என்றால் என்ன? சாதியம் என்றால் என்ன?
சாதி என்றால் என்ன? சாதியம் என்றால் என்ன?
சாதி என்றால் என்ன? சாதியம் என்றால் என்ன?
- விபரம்:
- வருகை: 1545
மனிதன் உலகத்திற்கு வரும்போது தனியாக வருகிறான், உலகத்திலிருந்து செல்லும் போதும் தனியாகவே செல்கிறான். ஆனால் இடைப்பட்ட காலத்தில் வாழும்போது அவனால் தனியாக வாழ முடியாது. அதனால் தான் நாகரீகம் தோன்றிய காலகட்டத்தில் மனிதர்கள் இயல்பாகவே கூட்டம் கூட்டமாக குடும்பங்களாகவும், குழுக்களாவும் வாழத் தொடங்கினர். இவை பின்னர் சமூகங்களாக மாறின. உலகின் எல்லா கலாசாரங்களிலும் இத்தகைய சமூகக் குழுக்கள் தொழில், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் போன்று சில பொதுவான அம்சங்களால் பிணைக்கப் பட்டுத் தங்களை அடையாளப் படுத்திக் கொண்டன. இதே போன்று, பாரத நாட்டில் தோன்றிய சமூக அமைப்புகளின் இன்றைய வடிவமே சாதிகள்.
ஒரு குறிப்பிட்ட சாதி மேல் என்றும், மற்றவை கீழானவை என்று எண்ணும் போக்கே சாதியம் எனப்படும். அண்ணல் அம்பேத்கர் ஒருவித வரலாற்றுச் சட்டகத்தை மனதில் கொண்டு இத்தகைய போக்கை பிராம்மணீயம் என அழைக்கிறார். ஆனால், ஒவ்வொரு சாதியிலும் தாம் உயர்ந்தவர் பிறர் தாழ்ந்தவர் என்கிற எண்ணம் வேரூன்றியுள்ளது என்பதே நிதர்சனமாகக் காணும் உண்மை.
மனிதர்கள் அனைவரும் ஒன்றே, சாதி வேறுபாடுகள் காலாவதியானவை என்கிற எண்ணமே மானுடநேய எண்ணமாகும். ஒவ்வொரு சாதியினரும் தன்னுள் ஊறிப்போயிருக்கும் இந்த சாதிய எண்ணத்தை அழித்து மானுட நேயத்தை வளர்க்க வேண்டும்.
சாதி என்றால் என்ன? வர்ணம் என்றால் என்ன? இரண்டும் ஒன்றா?
ஒருவர் தன்னுள் எழும் ஆர்வத்தினால் திறமை பெறும் தொழில் சார்ந்த வாழ்க்கைமுறைக்கு வர்ணம் என்று பெயர். இது நான்கு வகையாகப் பிரிக்கப்படுகின்றது. இவற்றில் ஒன்றையோ, பலவற்றையோ தேர்ந்தெடுத்து ஹிந்துக்கள் வாழ்ந்தார்கள் என்பதை இதிகாசங்களும், புராணங்களும் தெரிவிக்கின்றன. சாதி என்பது பிறப்பால் நிர்ணயிக்கப்படுவது. பெற்றோரின் சாதியே அவர்களின் குழந்தைகளுடைய சாதியாகும் என்று சொல்லுவது சாதி முறை.
வேதகாலத்தில் சாதி என்பதே இல்லை, வர்ணம் என்பது இருந்தது. வர்ணம் வாழ்வைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை மனிதருக்குத் தந்தது. சாதி அந்த சுதந்திரத்தை முற்றிலுமாக மறுத்தது. சாதியத்தை ஏற்படுத்தியது.
ஆனால், தற்போதைய பொதுவான வெகுஜன புரிதலில் வர்ணமும் சாதியும் ஒன்றாகக் கருதிக் குழப்பிக் கொள்ளப்படுகிறது. அது தவறான புரிதல்.
அப்படியானால், சாதியத்திற்கு வேதங்களில் இடம் இல்லையா?
நிச்சயமாக, இல்லை. அண்ணல் அம்பேத்கர் வேதகால முறை குறித்து மிகவும் விரிவாக விவரிக்கிறார். வர்ணாசிரமம் அடைந்த மாறுபாடுகளை அவர் மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கிறார்:
முதல் காலகட்டத்தில் வர்ணம் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒருவரால் செய்யப்படும் தொழிலாக அமைந்திருந்தது. வாழ்க்கையின் நடுவில் ஒருவர் வர்ணத்தை மாற்றிக்கொள்ள முடியும். இரண்டாம் கால கட்டத்தில் வாழ்க்கையின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒருவரது வர்ணம் நிர்ணயிக்கப்படும். ஆனால் அதனை அதன் பின்னர் மாற்றிக்கொள்ள முடியாது. மூன்றாவது காலகட்டத்திலேயே அது குல அடிப்படையில் மாறியது.
தொடக்க காலத்தில் ஒருவரது வர்ணத்தை மனு மற்றும் சப்தரிஷிகள் எனும் அமைப்பினைச் சார்ந்த முதுமக்கள் தீர்மானிப்பார்கள். நேர்முகத் தேர்வு போன்றதொரு நிகழ்ச்சியின் மூலம் இது தீர்மானிக்கப்பட்டது. இந்த வர்ண ஒதுக்கீடானது ஒரு யுகம் எனப்பட்ட நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும். அப்போது மனு மற்றும் சப்தரிஷி எனக்கூறப்படும் முதுமக்கள் குழுவும் மாற்றி அமைக்கப்படும். இதுவே மன்வந்தரம் என கருதப்பட்டது. புராணங்களில் கூறப்படும் இந்த மன்வந்தரம் என்பதே ஒரு மனிதரின் வர்ணம் ஒதுக்கிடப்படும் காலகட்டமாகும். இதன் மூலம் வர்ணம் என்பது ஒருவருக்கு கொடுக்கப்படும் பதவி என்பதும் அதற்கு ஒரு குறிப்பிட்ட கால அளவே இருந்தது என்பதும் தெளிவாகும்.
இந்த முறையிலிருந்த குறைபாடு என்னவென்றால், இந்த நேர்முகத் தேர்வு அத்தனை சரியாக ஒருவரது திறமைகளை மதிப்பிட முடியாது. மேலும் ஒரு வர்ணத்துக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு முறையான பயிற்சியும் இருக்காது.
எனவே குருகுல முறை பண்டைய பாரதத்தில் ஏற்படுத்தப்பட்டது. இதில் ஆச்சாரியர் எனும் குரு 12 ஆண்டுகள் காலத்திற்கு மாணாக்கருக்கு பயிற்சி அளித்து அதன் அடிப்படையில் மாணவரின் வர்ணம் எது என்பதனை நிர்ணயிப்பார். அந்த வர்ணமே மாணவரின் வாழ்க்கை முழுக்க நிலைக்கும். இந்த முறை முந்தைய முறையைக் காட்டிலும் சீர்மைப்படுத்தப்பட்டதாக இருந்தது. இந்த முறையிலும் வர்ணம் என்பது பிறப்படிப்படையில் ஏற்படுத்தப்படவில்லை. ஆனால் எப்போது உபநயன சடங்குகள் வீட்டிலேயே செய்யப்படும் முறை உருவாகியதோ அப்போது பிறப்படிப்படையிலான வர்ண-சாதி முறை ஏற்பட்டது.
அம்பேத்கர் இவ்வாறு கூறியுள்ளார் சரி. ஆனால் வேதங்களில் அம்பேத்கரின் இந்த வரலாற்று ஊகங்களுக்கு ஆதாரம் இருக்கிறதா?
ஆதாரங்கள் இருக்கின்றன. அவற்றில் சில இங்கே.
வேத மகரிஷிகள் பலர் இன்று தாழ்த்தப்பட்டதாக கருதப்படும் குலங்களில் வந்தவர்களே ஆவர். உதாரணமாக மீமாம்ச பாஷ்யம் எழுதிய சாபர மகரிஷி வேடரின் மகனாவார். இன்று சாபரர் எனும் குலம் தாழ்த்தப்பட்ட குலமாகும். சாபர பாஷ்யம் இந்து தத்துவ ஆன்மிக உலகின் அரும்பெரும் பொக்கிஷமாக விளங்கும் போது அந்த மகரிஷியின் குலத்தைச் சேர்ந்தவர்கள் தாழ்த்தப்பட்டிருப்பது இந்து தருமத்துக்கு எதிராக இழைக்கப்படும் பாவமல்லவா?
சத்யகாமன் எனும் பாலகனுக்கு தன் தந்தை யார் என்பதே தெரியாது. ஆனால், அவன் கௌதம மகரிஷியின் குருகுலத்தில் ஏற்கப்பட்டு வேத மந்திரங்களை காணும் சக்தி பெற்ற பெரும் அந்தண மகரிஷியானார் என சாந்தோக்கிய உபநிடதம் கூறுகிறது.
தாசி பெண்ணின் மகனாகப் பிறந்து, சூதாடும் மனைகளில் வளர்ந்தவரென்ற போதிலும், கவாக்ஷ மகரிஷி ஞானம் உடையவராகத் திகழ்ந்தார். வேத மந்திரங்களை ஞானக் கண்ணால் கண்ட மந்திர திரஷ்டா எனப்படும் மிகவும் உயர்ந்த ஆன்மிக நிலையில் வாழ்ந்த மகரிஷி அவர். அவரால் அருளப்பட்ட வேதமந்திரங்கள் மிக உயர்ந்த முக்தி நிலையை அளிப்பவை. அவரே சரஸ்வதி நதி தீரத்தில் நடந்த சோமயாகத்தின் எஜமானராக இருந்தருளினார் (ரிக் வேதம் - ஐதரேய பிராம்மணம்). அவரே நீர் நிலைகளைக் கட்டுப்படுத்திய சுயநலவாதிகளை அழித்து நீர் நிலைகளை மக்களுக்கு பொதுவான வளமாக ஆக்கினார் (சாமவேதம் - கௌஷீதகீ பிராம்மணம்). ரைவகன் எனும் வண்டி இழுப்பவர் பிரம்மஞானம், கொண்டிருந்தார் என்றும் அவரிடம் மன்னரே வந்து மண்டியிட்டு ஞானம் பெற்றார் என்றும் சாந்தோக்ய உபநிடதம் கூறுகிறது. பவிஷ்ய புராணத்தின் படி பராசரரின் அன்னை சூத்திரர் ஆவார். பாரசரருக்கும் மீனவப் பெண்ணுக்கும் பிறந்தவரே நான்கு வேதங்களையும் தொகுத்தளித்த மாமுனிவரான வேத வியாசர்! ஐததேரய பிராம்மணத்தை எழுதிய மஹிதாச மகரிஷியும் சூத்திர குடும்பத்தில் பிறந்தவரே ஆவார்.
எனவே, வேத காலத்தில் வர்ணம் பிறப்படிப்படையில் அமையவில்லை, வேத இலக்கியத்தில் பிறப்பு அடிப்படையிலான சாதியத்துக்கு இடமில்லை என அண்ணல் அம்பேத்கர் கூறியுள்ளதற்கு் தெள்ளத் தெளிவான ஆதாரங்கள் உள்ளன.
சுதந்திரத் தன்மையுடைய வர்ண அமைப்பு, எதனால் சுதந்திரமற்ற சாதிய அமைப்பாக மாறியது?
வேத நெறி சுதந்திரத்தை கொள்கையாகவும், செயலாகவும்கொண்டது. ஆனால், பிற்காலத்தில் வேத நெறிக்கு எதிராகத் தோன்றிய சுயநலவாதங்கள் வர்ண அமைப்பை சுதந்திரமற்ற அமைப்பாக மாற்றின. வேதநெறியை இகழ்ந்தன.
ஆனால், பழங்கால நூல்கள் சில வேதநெறிக்கு எதிராக சாதியம் பேசுகின்றனவே. அவை கூறும் சாதியக் கருத்துக்களைப் பற்றி என்ன சொல்லுகிறீர்கள்?
இப்பழங்கால நூல்களில் உள்ள கருத்துக்களை மாற்றலாம் என இந்து மதம் சொல்லுகிறது. இந்த நூல்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை, தற்காலிக சட்டங்கள் (ஸ்மிருதி) என்று இந்து மதம் வரையறுக்கிறது. ஆதிக்க மனப்பான்மை இன்றி உயிரினங்கள் அனைத்தும் சம உரிமையோடு சுதந்திரமாக வாழவேண்டும் என சொல்லுகிற வேதநெறியை இந்துமதம் மாற்றமுடியாதது, நிரந்தரமானது (ஸ்ருதி) என வரையறுக்கிறது.
சாதிப்பாகுபாடுகளை வலியுறுத்தும் தர்ம சாஸ்திரங்கள் இந்து தருமத்தின் அடிப்படை வேதங்களோ, உபநிஷதங்களோ, கீதையோ அல்ல - அவை ஸ்மிருதிகள் எனப்படும் தற்காலிக சட்டங்களே. இச்சட்டங்கள் இன்று பெரும்பாலும் எங்கும் செயல்முறையில் இல்லை.
ஆனால் அதுமட்டும் போதாது. கருத்தளவிலும் இச்சட்டங்களை இந்துக்கள் முழுமையாக மறுதலிக்க வேண்டும். இன்று உலக அரசியல் சட்டங்களில் உன்னதமான அரசியல் நிர்ணய சட்டமாக விளங்கும், அன்ணல் அம்பேத்கர் தலைமையில் தேசபக்த தலைவர்கள் இணைந்து உருவாக்கிய பாரத அரசின் அரசியல் நிர்ணய சட்டமும், அதன் அடிப்படை கருத்தாக்கமுமே இந்துக்களின் சமூக செயல்பாடுகளை நிர்ணயிக்கும் சட்டமாகத் திகழ வேண்டும்.
ஆனால் சாதி முறை என்பது இனரீதியில் உருவானது, கைபர், போலன் கணவாய் வழியாக படையெடுத்த ஆரியர்கள் இங்குள்ள பூர்வீகவாசிகளான திராவிடர்களை அடிமைப்படுத்தி அவர்களை சூத்திரர்களாக்கினார்கள். பிராம்மணர்கள் ஆரிய வந்தேறிகள். இதைத்தான் ஆரியர்களுக்கும் தஸ்யூக்களுக்குமான போராட்டமாக இந்து மதத்தின் அடிப்படையான ரிக்வேதமே சொல்கிறது எனக் கூறுகிறார்களே?
இது குறித்தும் பாபாசாகேப் அம்பேத்கரே தெளிவுபடுத்தியுள்ளார். ஆரிய - தஸ்யு எனும் பதங்கள் இனத்தைக் குறிப்பவை அல்ல என அவர் கூறியுள்ளார். ஆரியப் படையெடுப்பு என்பதே ஒரு இனவாதக் கற்பனையாகும் எனக் கூறும் அம்பேத்கர், பிராம்மணர்களும் சரி சூத்திரர்களும் சரி வெவ்வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள் எனக்கூறும் ஆரிய-திராவிட இனவாதக் கோட்பாட்டினை முழுமையாக மறுத்துள்ளார். அவர் கூறுவதாவது -
“ஆரியப் படையெடுப்புக் கோட்பாடானது உண்மைத்தகவல்களின் மேல் உருவாக்கப்பட்டதல்ல. மாறாக முதலில் ஆரியப் படையெடுப்புக் கோட்பாடு உருவாக்கப்பட்டு பின்னர் அதனை உண்மையாக நிரூபிக்கும் விதத்தில் தகவல்கள் தேர்ந்தெடுத்து புனையப்பட்டதாகும். அது ஒவ்வொரு ஆராய்ச்சியின் போதும் தரையில் வீழ்கிறது.
வேத இலக்கியங்களில் இந்தியாவின் மீது ஆரிய இனம் படையெடுத்ததற்கோ அல்லது இங்கு வாழ்ந்த பூர்விக வாசிகளாக கருதப்படும் தஸ்யூக்கள் அல்லது தாஸர்களை வெற்றிக்கொண்டதற்கோ ஆதாரமில்லை. தாஸர்கள் அல்லது தஸ்யூக்களுக்கும் ஆரியருக்குமான வேறுபாடு இனரீதியிலானது என்பதற்கோ ஆரியர்களின் தோல் நிறமும் தாஸ-தஸ்யூக்களின் தோல் நிறமும் வேறுபட்டது என்பதற்கோ எவ்வித ஆதாரமும் இல்லை.”
அம்பேத்கர் மேலும் கூறுகிறார்: “தீண்டாமைக் கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டவர்கள் திராவிடர்கள் என்றால் பிராம்மணர்களும் திராவிடர்களே. பிராம்மணர்கள் ஆரியர்கள் என்றால் தீண்டாமைக் கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டவர்களும் ஆரியர்களே. பிராம்மணர்கள் நாகர்கள் என்றால் தீண்டாமைக் கொடுமைக்கு உட்படுத்தப் பட்டவர்களும் நாகர்களே.”
சரி, அம்பேத்கர் இப்படி கூறுகிறார். ஆனால் வரலாற்றாசிரியர்கள் என்ன சொல்கிறார்கள்? திராவிட நகரங்களான சிந்து சமவெளி நாகரிகத்தை ஆரியர்கள் அழித்ததாகவும் அதன் பிறகு அவர்கள் சாதி முறையை ஏற்படுத்தியதாகவும் கூறுகிறார்களே?
இல்லை. இன்றைய நவீன வரலாற்றாசிரியர்களும் அகழ்வாராய்ச்சியாளர்களும் அம்பேத்கர் கூறிய கருத்துக்களில் இருக்கும் உண்மையை ஏற்றுக்கொள்கிறார்கள்.
அதுமட்டுமல்ல ஆரிய-இனவாதக் கோட்பாட்டுக்கும் அப்படி ஒரு இனம் இந்தியாவில் பழங்காலத்தில் நுழைந்ததற்கும் எவ்வித மரபணு ஆதாரமும் இல்லை என நவீன மரபணு ஆராய்ச்சியாளர்களும் கூறுகிறார்கள். பிராம்மண சாதி எனக் கருதப்படுபவர்களுக்கும் நம் தேச காடுகளில் வசிக்கும் வனவாசி மக்கள் சமுதாயங்களுக்கும் மரபணுத் தொடர்புகள் உள்ளது நிரூபிக்கப் பட்டுள்ளது.
சிந்து சமவெளியில் அண்மைக் காலங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட ஜிம் ஷாப்பர் எனும் அகழ்வாராய்ச்சியாளர் கூறுவதாவது: “அகழ்வாராய்ச்சி முடிவுகள் எதுவும் வெளியிலிருந்து படையெடுப்பு ஏற்பட்டதாக காட்டவில்லை. (பண்டைய பாரதத்தின்) பண்பாட்டு வளர்ச்சி இந்த மண்ணிலேயே ஏற்பட்ட கலாச்சார பரிமாணமே ஆகும்.”
அதைப்போலவே இருபது ஆண்டுகளும் மேலாக ஹரப்பாவில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட மார்க் கென்னோயர் தம் இணைய தளத்தில் கூறுகிறார்: “பழைய அகழ்வாராய்ச்சியாளர்கள் கருதியது போல ஆரிய படையெடுப்பு நடந்ததற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. சிந்து-சரஸ்வதி நதி தீரத்தில் ஏற்பட்ட பண்பாட்டுக்கும் அதன் அருகாமையில் வாழ்ந்தவர்களுக்கும் ஏற்பட்ட உறவுகள் தொடர்புகள் குறித்து பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.” மேலும், ஹரப்பா என்பதே ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ள ஹரிவிப்யாவாக இருக்கலாம் எனும் அறிவார்ந்த ஊகத்தையும் தெரிவிக்கிறார் (ஹரிவிப்யா எனும் இடத்தில் புரு வம்சத்தவர்களுக்கும் துர்வாச வம்சத்தவர்களுக்கும் போர் நடந்ததாக ரிக் வேதம் தெரிவிக்கிறது. அவர்கள் இருவருமே வேத பண்பாட்டை சேர்ந்தவர்கள்.)
அதைப் போலவே, பழைய மரபணு ஆராய்ச்சியாளர்கள் சிலர் சில மேம்போக்கான ஆராய்ச்சிகளின் அடிப்படையில் ஆரிய படையெடுப்புக்கு ஆதாரம் இருப்பதாக தெரிவித்தனர். ஆனால், அண்மையில் நடத்தப்பட்ட முழுமையான ஆராய்ச்சிகளோ இந்திய சாதிகளின் மரபணுக்கள் தங்களுக்குள் ஒற்றுமையுடன் இருப்பதுடன் அவற்றில் வெளியிலிருந்து வந்த ஒரு கூட்டத்தின் தாக்கம் (ஆரியப் படையெடுப்பு நடந்திருந்தால் எப்படி இருந்திருக்க வேண்டுமோ அப்படி) இருக்கவே இல்லை எனத் தெரிவிக்கின்றன.
அது மட்டுமலல. அம்பேத்கர் கூறியதைப் போலவே, (”தீண்டாமைக் கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டவர்கள் திராவிடர்களென்றால் பிராம்மணர்களும் திராவிடர்களே. பிராம்மணர்கள் ஆரியர்கள் என்றால் தீண்டாமைக் கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டவர்களும் ஆரியர்களே”) இங்குள்ள அந்தண சாதியினரும் வனவாசிகளும் மரபணுத் தொடர்புடையவர்கள் எனவும் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஒரு குறிப்பிட்ட சாதி மேல் என்றும், மற்றவை கீழானவை என்று எண்ணும் போக்கே சாதியம் எனப்படும். அண்ணல் அம்பேத்கர் ஒருவித வரலாற்றுச் சட்டகத்தை மனதில் கொண்டு இத்தகைய போக்கை பிராம்மணீயம் என அழைக்கிறார். ஆனால், ஒவ்வொரு சாதியிலும் தாம் உயர்ந்தவர் பிறர் தாழ்ந்தவர் என்கிற எண்ணம் வேரூன்றியுள்ளது என்பதே நிதர்சனமாகக் காணும் உண்மை.
மனிதர்கள் அனைவரும் ஒன்றே, சாதி வேறுபாடுகள் காலாவதியானவை என்கிற எண்ணமே மானுடநேய எண்ணமாகும். ஒவ்வொரு சாதியினரும் தன்னுள் ஊறிப்போயிருக்கும் இந்த சாதிய எண்ணத்தை அழித்து மானுட நேயத்தை வளர்க்க வேண்டும்.
சாதி என்றால் என்ன? வர்ணம் என்றால் என்ன? இரண்டும் ஒன்றா?
ஒருவர் தன்னுள் எழும் ஆர்வத்தினால் திறமை பெறும் தொழில் சார்ந்த வாழ்க்கைமுறைக்கு வர்ணம் என்று பெயர். இது நான்கு வகையாகப் பிரிக்கப்படுகின்றது. இவற்றில் ஒன்றையோ, பலவற்றையோ தேர்ந்தெடுத்து ஹிந்துக்கள் வாழ்ந்தார்கள் என்பதை இதிகாசங்களும், புராணங்களும் தெரிவிக்கின்றன. சாதி என்பது பிறப்பால் நிர்ணயிக்கப்படுவது. பெற்றோரின் சாதியே அவர்களின் குழந்தைகளுடைய சாதியாகும் என்று சொல்லுவது சாதி முறை.
வேதகாலத்தில் சாதி என்பதே இல்லை, வர்ணம் என்பது இருந்தது. வர்ணம் வாழ்வைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை மனிதருக்குத் தந்தது. சாதி அந்த சுதந்திரத்தை முற்றிலுமாக மறுத்தது. சாதியத்தை ஏற்படுத்தியது.
ஆனால், தற்போதைய பொதுவான வெகுஜன புரிதலில் வர்ணமும் சாதியும் ஒன்றாகக் கருதிக் குழப்பிக் கொள்ளப்படுகிறது. அது தவறான புரிதல்.
அப்படியானால், சாதியத்திற்கு வேதங்களில் இடம் இல்லையா?
நிச்சயமாக, இல்லை. அண்ணல் அம்பேத்கர் வேதகால முறை குறித்து மிகவும் விரிவாக விவரிக்கிறார். வர்ணாசிரமம் அடைந்த மாறுபாடுகளை அவர் மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கிறார்:
முதல் காலகட்டத்தில் வர்ணம் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒருவரால் செய்யப்படும் தொழிலாக அமைந்திருந்தது. வாழ்க்கையின் நடுவில் ஒருவர் வர்ணத்தை மாற்றிக்கொள்ள முடியும். இரண்டாம் கால கட்டத்தில் வாழ்க்கையின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒருவரது வர்ணம் நிர்ணயிக்கப்படும். ஆனால் அதனை அதன் பின்னர் மாற்றிக்கொள்ள முடியாது. மூன்றாவது காலகட்டத்திலேயே அது குல அடிப்படையில் மாறியது.
தொடக்க காலத்தில் ஒருவரது வர்ணத்தை மனு மற்றும் சப்தரிஷிகள் எனும் அமைப்பினைச் சார்ந்த முதுமக்கள் தீர்மானிப்பார்கள். நேர்முகத் தேர்வு போன்றதொரு நிகழ்ச்சியின் மூலம் இது தீர்மானிக்கப்பட்டது. இந்த வர்ண ஒதுக்கீடானது ஒரு யுகம் எனப்பட்ட நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும். அப்போது மனு மற்றும் சப்தரிஷி எனக்கூறப்படும் முதுமக்கள் குழுவும் மாற்றி அமைக்கப்படும். இதுவே மன்வந்தரம் என கருதப்பட்டது. புராணங்களில் கூறப்படும் இந்த மன்வந்தரம் என்பதே ஒரு மனிதரின் வர்ணம் ஒதுக்கிடப்படும் காலகட்டமாகும். இதன் மூலம் வர்ணம் என்பது ஒருவருக்கு கொடுக்கப்படும் பதவி என்பதும் அதற்கு ஒரு குறிப்பிட்ட கால அளவே இருந்தது என்பதும் தெளிவாகும்.
இந்த முறையிலிருந்த குறைபாடு என்னவென்றால், இந்த நேர்முகத் தேர்வு அத்தனை சரியாக ஒருவரது திறமைகளை மதிப்பிட முடியாது. மேலும் ஒரு வர்ணத்துக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு முறையான பயிற்சியும் இருக்காது.
எனவே குருகுல முறை பண்டைய பாரதத்தில் ஏற்படுத்தப்பட்டது. இதில் ஆச்சாரியர் எனும் குரு 12 ஆண்டுகள் காலத்திற்கு மாணாக்கருக்கு பயிற்சி அளித்து அதன் அடிப்படையில் மாணவரின் வர்ணம் எது என்பதனை நிர்ணயிப்பார். அந்த வர்ணமே மாணவரின் வாழ்க்கை முழுக்க நிலைக்கும். இந்த முறை முந்தைய முறையைக் காட்டிலும் சீர்மைப்படுத்தப்பட்டதாக இருந்தது. இந்த முறையிலும் வர்ணம் என்பது பிறப்படிப்படையில் ஏற்படுத்தப்படவில்லை. ஆனால் எப்போது உபநயன சடங்குகள் வீட்டிலேயே செய்யப்படும் முறை உருவாகியதோ அப்போது பிறப்படிப்படையிலான வர்ண-சாதி முறை ஏற்பட்டது.
அம்பேத்கர் இவ்வாறு கூறியுள்ளார் சரி. ஆனால் வேதங்களில் அம்பேத்கரின் இந்த வரலாற்று ஊகங்களுக்கு ஆதாரம் இருக்கிறதா?
ஆதாரங்கள் இருக்கின்றன. அவற்றில் சில இங்கே.
வேத மகரிஷிகள் பலர் இன்று தாழ்த்தப்பட்டதாக கருதப்படும் குலங்களில் வந்தவர்களே ஆவர். உதாரணமாக மீமாம்ச பாஷ்யம் எழுதிய சாபர மகரிஷி வேடரின் மகனாவார். இன்று சாபரர் எனும் குலம் தாழ்த்தப்பட்ட குலமாகும். சாபர பாஷ்யம் இந்து தத்துவ ஆன்மிக உலகின் அரும்பெரும் பொக்கிஷமாக விளங்கும் போது அந்த மகரிஷியின் குலத்தைச் சேர்ந்தவர்கள் தாழ்த்தப்பட்டிருப்பது இந்து தருமத்துக்கு எதிராக இழைக்கப்படும் பாவமல்லவா?
சத்யகாமன் எனும் பாலகனுக்கு தன் தந்தை யார் என்பதே தெரியாது. ஆனால், அவன் கௌதம மகரிஷியின் குருகுலத்தில் ஏற்கப்பட்டு வேத மந்திரங்களை காணும் சக்தி பெற்ற பெரும் அந்தண மகரிஷியானார் என சாந்தோக்கிய உபநிடதம் கூறுகிறது.
தாசி பெண்ணின் மகனாகப் பிறந்து, சூதாடும் மனைகளில் வளர்ந்தவரென்ற போதிலும், கவாக்ஷ மகரிஷி ஞானம் உடையவராகத் திகழ்ந்தார். வேத மந்திரங்களை ஞானக் கண்ணால் கண்ட மந்திர திரஷ்டா எனப்படும் மிகவும் உயர்ந்த ஆன்மிக நிலையில் வாழ்ந்த மகரிஷி அவர். அவரால் அருளப்பட்ட வேதமந்திரங்கள் மிக உயர்ந்த முக்தி நிலையை அளிப்பவை. அவரே சரஸ்வதி நதி தீரத்தில் நடந்த சோமயாகத்தின் எஜமானராக இருந்தருளினார் (ரிக் வேதம் - ஐதரேய பிராம்மணம்). அவரே நீர் நிலைகளைக் கட்டுப்படுத்திய சுயநலவாதிகளை அழித்து நீர் நிலைகளை மக்களுக்கு பொதுவான வளமாக ஆக்கினார் (சாமவேதம் - கௌஷீதகீ பிராம்மணம்). ரைவகன் எனும் வண்டி இழுப்பவர் பிரம்மஞானம், கொண்டிருந்தார் என்றும் அவரிடம் மன்னரே வந்து மண்டியிட்டு ஞானம் பெற்றார் என்றும் சாந்தோக்ய உபநிடதம் கூறுகிறது. பவிஷ்ய புராணத்தின் படி பராசரரின் அன்னை சூத்திரர் ஆவார். பாரசரருக்கும் மீனவப் பெண்ணுக்கும் பிறந்தவரே நான்கு வேதங்களையும் தொகுத்தளித்த மாமுனிவரான வேத வியாசர்! ஐததேரய பிராம்மணத்தை எழுதிய மஹிதாச மகரிஷியும் சூத்திர குடும்பத்தில் பிறந்தவரே ஆவார்.
எனவே, வேத காலத்தில் வர்ணம் பிறப்படிப்படையில் அமையவில்லை, வேத இலக்கியத்தில் பிறப்பு அடிப்படையிலான சாதியத்துக்கு இடமில்லை என அண்ணல் அம்பேத்கர் கூறியுள்ளதற்கு் தெள்ளத் தெளிவான ஆதாரங்கள் உள்ளன.
சுதந்திரத் தன்மையுடைய வர்ண அமைப்பு, எதனால் சுதந்திரமற்ற சாதிய அமைப்பாக மாறியது?
வேத நெறி சுதந்திரத்தை கொள்கையாகவும், செயலாகவும்கொண்டது. ஆனால், பிற்காலத்தில் வேத நெறிக்கு எதிராகத் தோன்றிய சுயநலவாதங்கள் வர்ண அமைப்பை சுதந்திரமற்ற அமைப்பாக மாற்றின. வேதநெறியை இகழ்ந்தன.
ஆனால், பழங்கால நூல்கள் சில வேதநெறிக்கு எதிராக சாதியம் பேசுகின்றனவே. அவை கூறும் சாதியக் கருத்துக்களைப் பற்றி என்ன சொல்லுகிறீர்கள்?
இப்பழங்கால நூல்களில் உள்ள கருத்துக்களை மாற்றலாம் என இந்து மதம் சொல்லுகிறது. இந்த நூல்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை, தற்காலிக சட்டங்கள் (ஸ்மிருதி) என்று இந்து மதம் வரையறுக்கிறது. ஆதிக்க மனப்பான்மை இன்றி உயிரினங்கள் அனைத்தும் சம உரிமையோடு சுதந்திரமாக வாழவேண்டும் என சொல்லுகிற வேதநெறியை இந்துமதம் மாற்றமுடியாதது, நிரந்தரமானது (ஸ்ருதி) என வரையறுக்கிறது.
சாதிப்பாகுபாடுகளை வலியுறுத்தும் தர்ம சாஸ்திரங்கள் இந்து தருமத்தின் அடிப்படை வேதங்களோ, உபநிஷதங்களோ, கீதையோ அல்ல - அவை ஸ்மிருதிகள் எனப்படும் தற்காலிக சட்டங்களே. இச்சட்டங்கள் இன்று பெரும்பாலும் எங்கும் செயல்முறையில் இல்லை.
ஆனால் அதுமட்டும் போதாது. கருத்தளவிலும் இச்சட்டங்களை இந்துக்கள் முழுமையாக மறுதலிக்க வேண்டும். இன்று உலக அரசியல் சட்டங்களில் உன்னதமான அரசியல் நிர்ணய சட்டமாக விளங்கும், அன்ணல் அம்பேத்கர் தலைமையில் தேசபக்த தலைவர்கள் இணைந்து உருவாக்கிய பாரத அரசின் அரசியல் நிர்ணய சட்டமும், அதன் அடிப்படை கருத்தாக்கமுமே இந்துக்களின் சமூக செயல்பாடுகளை நிர்ணயிக்கும் சட்டமாகத் திகழ வேண்டும்.
ஆனால் சாதி முறை என்பது இனரீதியில் உருவானது, கைபர், போலன் கணவாய் வழியாக படையெடுத்த ஆரியர்கள் இங்குள்ள பூர்வீகவாசிகளான திராவிடர்களை அடிமைப்படுத்தி அவர்களை சூத்திரர்களாக்கினார்கள். பிராம்மணர்கள் ஆரிய வந்தேறிகள். இதைத்தான் ஆரியர்களுக்கும் தஸ்யூக்களுக்குமான போராட்டமாக இந்து மதத்தின் அடிப்படையான ரிக்வேதமே சொல்கிறது எனக் கூறுகிறார்களே?
இது குறித்தும் பாபாசாகேப் அம்பேத்கரே தெளிவுபடுத்தியுள்ளார். ஆரிய - தஸ்யு எனும் பதங்கள் இனத்தைக் குறிப்பவை அல்ல என அவர் கூறியுள்ளார். ஆரியப் படையெடுப்பு என்பதே ஒரு இனவாதக் கற்பனையாகும் எனக் கூறும் அம்பேத்கர், பிராம்மணர்களும் சரி சூத்திரர்களும் சரி வெவ்வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள் எனக்கூறும் ஆரிய-திராவிட இனவாதக் கோட்பாட்டினை முழுமையாக மறுத்துள்ளார். அவர் கூறுவதாவது -
“ஆரியப் படையெடுப்புக் கோட்பாடானது உண்மைத்தகவல்களின் மேல் உருவாக்கப்பட்டதல்ல. மாறாக முதலில் ஆரியப் படையெடுப்புக் கோட்பாடு உருவாக்கப்பட்டு பின்னர் அதனை உண்மையாக நிரூபிக்கும் விதத்தில் தகவல்கள் தேர்ந்தெடுத்து புனையப்பட்டதாகும். அது ஒவ்வொரு ஆராய்ச்சியின் போதும் தரையில் வீழ்கிறது.
வேத இலக்கியங்களில் இந்தியாவின் மீது ஆரிய இனம் படையெடுத்ததற்கோ அல்லது இங்கு வாழ்ந்த பூர்விக வாசிகளாக கருதப்படும் தஸ்யூக்கள் அல்லது தாஸர்களை வெற்றிக்கொண்டதற்கோ ஆதாரமில்லை. தாஸர்கள் அல்லது தஸ்யூக்களுக்கும் ஆரியருக்குமான வேறுபாடு இனரீதியிலானது என்பதற்கோ ஆரியர்களின் தோல் நிறமும் தாஸ-தஸ்யூக்களின் தோல் நிறமும் வேறுபட்டது என்பதற்கோ எவ்வித ஆதாரமும் இல்லை.”
அம்பேத்கர் மேலும் கூறுகிறார்: “தீண்டாமைக் கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டவர்கள் திராவிடர்கள் என்றால் பிராம்மணர்களும் திராவிடர்களே. பிராம்மணர்கள் ஆரியர்கள் என்றால் தீண்டாமைக் கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டவர்களும் ஆரியர்களே. பிராம்மணர்கள் நாகர்கள் என்றால் தீண்டாமைக் கொடுமைக்கு உட்படுத்தப் பட்டவர்களும் நாகர்களே.”
சரி, அம்பேத்கர் இப்படி கூறுகிறார். ஆனால் வரலாற்றாசிரியர்கள் என்ன சொல்கிறார்கள்? திராவிட நகரங்களான சிந்து சமவெளி நாகரிகத்தை ஆரியர்கள் அழித்ததாகவும் அதன் பிறகு அவர்கள் சாதி முறையை ஏற்படுத்தியதாகவும் கூறுகிறார்களே?
இல்லை. இன்றைய நவீன வரலாற்றாசிரியர்களும் அகழ்வாராய்ச்சியாளர்களும் அம்பேத்கர் கூறிய கருத்துக்களில் இருக்கும் உண்மையை ஏற்றுக்கொள்கிறார்கள்.
அதுமட்டுமல்ல ஆரிய-இனவாதக் கோட்பாட்டுக்கும் அப்படி ஒரு இனம் இந்தியாவில் பழங்காலத்தில் நுழைந்ததற்கும் எவ்வித மரபணு ஆதாரமும் இல்லை என நவீன மரபணு ஆராய்ச்சியாளர்களும் கூறுகிறார்கள். பிராம்மண சாதி எனக் கருதப்படுபவர்களுக்கும் நம் தேச காடுகளில் வசிக்கும் வனவாசி மக்கள் சமுதாயங்களுக்கும் மரபணுத் தொடர்புகள் உள்ளது நிரூபிக்கப் பட்டுள்ளது.
சிந்து சமவெளியில் அண்மைக் காலங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட ஜிம் ஷாப்பர் எனும் அகழ்வாராய்ச்சியாளர் கூறுவதாவது: “அகழ்வாராய்ச்சி முடிவுகள் எதுவும் வெளியிலிருந்து படையெடுப்பு ஏற்பட்டதாக காட்டவில்லை. (பண்டைய பாரதத்தின்) பண்பாட்டு வளர்ச்சி இந்த மண்ணிலேயே ஏற்பட்ட கலாச்சார பரிமாணமே ஆகும்.”
அதைப்போலவே இருபது ஆண்டுகளும் மேலாக ஹரப்பாவில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட மார்க் கென்னோயர் தம் இணைய தளத்தில் கூறுகிறார்: “பழைய அகழ்வாராய்ச்சியாளர்கள் கருதியது போல ஆரிய படையெடுப்பு நடந்ததற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. சிந்து-சரஸ்வதி நதி தீரத்தில் ஏற்பட்ட பண்பாட்டுக்கும் அதன் அருகாமையில் வாழ்ந்தவர்களுக்கும் ஏற்பட்ட உறவுகள் தொடர்புகள் குறித்து பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.” மேலும், ஹரப்பா என்பதே ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ள ஹரிவிப்யாவாக இருக்கலாம் எனும் அறிவார்ந்த ஊகத்தையும் தெரிவிக்கிறார் (ஹரிவிப்யா எனும் இடத்தில் புரு வம்சத்தவர்களுக்கும் துர்வாச வம்சத்தவர்களுக்கும் போர் நடந்ததாக ரிக் வேதம் தெரிவிக்கிறது. அவர்கள் இருவருமே வேத பண்பாட்டை சேர்ந்தவர்கள்.)
அதைப் போலவே, பழைய மரபணு ஆராய்ச்சியாளர்கள் சிலர் சில மேம்போக்கான ஆராய்ச்சிகளின் அடிப்படையில் ஆரிய படையெடுப்புக்கு ஆதாரம் இருப்பதாக தெரிவித்தனர். ஆனால், அண்மையில் நடத்தப்பட்ட முழுமையான ஆராய்ச்சிகளோ இந்திய சாதிகளின் மரபணுக்கள் தங்களுக்குள் ஒற்றுமையுடன் இருப்பதுடன் அவற்றில் வெளியிலிருந்து வந்த ஒரு கூட்டத்தின் தாக்கம் (ஆரியப் படையெடுப்பு நடந்திருந்தால் எப்படி இருந்திருக்க வேண்டுமோ அப்படி) இருக்கவே இல்லை எனத் தெரிவிக்கின்றன.
அது மட்டுமலல. அம்பேத்கர் கூறியதைப் போலவே, (”தீண்டாமைக் கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டவர்கள் திராவிடர்களென்றால் பிராம்மணர்களும் திராவிடர்களே. பிராம்மணர்கள் ஆரியர்கள் என்றால் தீண்டாமைக் கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டவர்களும் ஆரியர்களே”) இங்குள்ள அந்தண சாதியினரும் வனவாசிகளும் மரபணுத் தொடர்புடையவர்கள் எனவும் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
நன்றி சாந்தன்
- REF:
தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பட்டியல் - ஆணை
Government Orders of
Interest to Citizens


GOVERNMENT OF TAMIL NADU
ABSTRACT
Communities - Scheduled
Castes and Scheduled Tribes – The Constitution Scheduled Castes and Scheduled
Tribes Orders, 1950 – Amended – The Scheduled Castes and Scheduled Tribes
(Amendment) Orders, 1976 – Issued – The Scheduled Castes and Scheduled Tribes
Orders (Amendment) Act, 1976 – Published and came into force – Notification –
Republished and communicated for general information – Orders Issued.
SOCIAL WELFARE DEPARTMENT
G.O.Ms.No.1773
Dated: 23.6.1984
Read :-
1. From the Secretary to
Government of India, Ministry of Home Affairs, New Delhi , Letter No.BC.12016/34/76-SCT.V,
dated 8th October 1976.
2. From the Government of India , Ministry of Home Affairs, New Delhi , Letter
No.BC.12016/34/76-SCT.V,dated 27th July 1977.
Read again :-
1. G.O.Ms.No.709, Social
Welfare dated the 7th October 1977.
2. Government Memo
No.65226/HW.VIII/77-3, Social Welfare, Dated the 2nd November 1977.
ORDER:
The Government of
India, Ministry of Home Affairs, New Delhi, have informed this Government in
their letter first read above that The Constitution (Scheduled Castes) Order,
1950 and the Constitution (Scheduled Tribes) Order 1950 as modified in the
Constitution Scheduled Castes (Modification) Order,1956 and the Constitution
Scheduled Tribes (Modification) Order, 1956 have been amended in the Scheduled
Castes and Scheduled Tribes (Amendment) Act, 1976, which was passed by the
Parliament and received the assent of the President of India on 18th September
1976. They have also informed that the Act has not yet come into force and that
the date from which the Act will come into force will be notified in the
Gazette of India in due course. Subsequently, the Government of India, Ministry
of Home Affairs, New Delhi,have informed this Government that the lists of
Scheduled Castes and Scheduled Tribes as contained in The Constitution
(Scheduled Castes) Order, 1950 and the Constitution (Scheduled Tribes) Order
1950 have been amended by the Scheduled Castes and Scheduled Tribes (Amendment)
Act, 1976 (Central Act 108 of 1976) which has been brought into force with
effect from the 27th July, 1977. They have pointed out that it has been brought
to the notice of the Ministry of Home Affairs, Government of India, New Delhi
that the District Collectors, Heads of Departments certificate issuing
authorities, etc., are not yet aware of the revised list of Scheduled Castes
and Scheduled Tribes pertaining to the State of Tamil Nadu and have requested
that the revised list may kindly be widely circulated to all the concerned
authorities and the State.
2. The Scheduled Castes
and Scheduled Tribes Order (Amendment) Act, 1976 (Central Act 108 of 1976) was
accordingly republished by this Government in the Extraordinary issue of the Tamil
Nadu Government Gazette in
Part IV-Section 4, dated 31st December 1976. The Notification of the Government
of India bringing into force of the Act with effect from the 27th July 1977 was
also published at page 637 in Part-II Section 1 of the Tamil
Nadu Government Gazette, dated
the 2nd November 1977 according to the orders issued in the Government Order
read above. In the Government Memo. read above the position was pointed out to
all the Collectors and Heads of Departments and they were requested to instruct
the certificate issuing authorities under their control to issue community
certificates to persons belonging to Scheduled Castes and Scheduled Tribes as
per the revised list in the Scheduled Castes and Scheduled Tribes Orders
(Amendment) Act, 1976, with effect from the 27th July 1977.
3. It has been brought
to the notice of this Government that certificate issuing authorities still not
adopting the list of revised list and correct name of Scheduled Castes and
Scheduled Tribes while issuing the community certificate to eligible and
genuine persons belonging to Scheduled Castes and Scheduled Tribes. It has,
therefore, become necessary to bring to notice of all concerned the list of
Scheduled Castes and Scheduled Tribes as contained in the Scheduled Castes and
Scheduled Tribes (Amendment) Act, 1976 (Central Act 108 of 1976) which was
brought into force with effect from the 27th JUly 1977. A list of Scheduled
Castes and Scheduled Tribes, 1976 is given in Annexure I to this Order. In
order to have a first hand knowledge of the position with respect of list of
Scheduled Castes and Scheduled Tribes Orders, 1950 and 1956, a copy of each of
those Orders are also given in Annexure-II to this Order for information and
guidance in such matter. A copy of the Act is also given in Annexure-III to
this Order.
4. The Collectors and
Heads of Departments concerned and the certificate issuing authorities under
their control are requested to adopt the list of Scheduled Castes and Scheduled
Tribes contained in the Central Act, 1976, strictly. Any deviation will be
viewed seriously. The receipt of this order shall be acknowledged.
(By Order of the Governor)
M.K.GOMETHAGAVELU.
ADDITIONAL SECRETARY TO GOVERNMENT.
ANNEXURE I
THE SCHEDULED CASTES
AND SCHEDULED TRIBES ORDERS (AMENDMENT) ACT, 1976 (CENTRAL ACT NO.108 OF 1976)
The Constitution
(Scheduled Castes) Order, 1950 as amended by the Scheduled Castes (Amendment)
Order, 1976
In exercise of the
powers conferred by clause (1) of Article 341 of the Constitution of India, the
President, after consultation with the Governors, Rajpramukhs of the States
concerned, is pleased to make the following order,namely :-
1.This Act may be
called the Scheduled Castes (Amendment) Act, 1976. it shall come into force on
the 27th July 1977.
2. Subject to the
provisions of this Act, the castes, races or tribes, or parts thereof, or
groups within, castes or tribes, specified in Parts I to XIX of the Schedule to
this Order, shall in relation to the States to which those Parts respectively
relate, be deemed to be Scheduled Castes so far as regards members thereof
resident in the localities specified in relation to them in those Parts of that
Schedule.
3. Notwithstanding
anything contained in Paragraph 2, no person who professes a religion different
from the Hindu or the Sikh religion shall be deemed to be a member of a
Scheduled Caste.
4. Any reference in
this Order to a State or to a district or other territorial division thereof,
shall be construed as a reference to the State, district or other territorial
division as constituted on the 1st day of May 1976.
THE SCHEDULE (SCHEDULED CASTES).
PART XVI – TAMIL NADU.
1.
Adi Andhra
2.
Adi Dravida
3.
Adi Karnataka
4.
Ajila
5.
Arunthathiyar
6.
Ayyanavar (in Kanyakumari district and
Shenkottah taulk of Tirunelveli district).
7.
Baira
8.
Bakuda
9.
Bandi
10.
Bellara
11.
Bharatar (in Kanyakumari district and
Shenkottah taulk of Tirunelveli district).
12.
Chakkiliyan
13.
Chalavadi
14.
Chamar, Muchi
15.
Chandala
16.
Cheruman
17.
Devendrakulathan
18.
Dom, Dombara, Paidi, Pano
19.
Domban
20.
Godagali
21.
Godda
22.
Gosangi
23.
Holeya
24.
Jaggali
25.
Jambuvulu
26.
Kadaiyan
27.
Kakkalan (in Kanyakumari district and
Shenkottah taulk of Tirunelveli district).
28.
Kalladi
29.
Kanakkan, Padanna (in the Nilgiris district).
30.
Karimpalan
31.
Kavara (in Kanyakumari district and Shenkottah
taulk of Tirunelveli district).
32.
Koliyan
33.
Koosa
34.
Kootan, Koodan (in Kanyakumari district and
Shenkottah taulk of Tirunelveli district).
35.
Kudumban
36.
Kuravan, Sidhanar
37.
Madari
38.
Madiga
39.
Maila
40.
Mala
41.
Mannan (in Kanyakumari district and Shenkottah
taulk of Tirunelveli district).
42.
Mavilan
43.
Moger
44.
Mundala
45.
Nalakeyava
46.
Nayadi
47.
Padannan (in Kanyakumari district and
Shenkottah taulk of Tirunelveli district).
48.
Pagadai
49.
Pallan
50.
Palluvan
51.
Pambada
52.
Panan (in Kanyakumari district and Shenkottah
taulk of Tirunelveli district).
53.
Panchama
54.
Pannadi
55.
Panniandi
56.
Paraiyan, Parayan, Sambavar
57.
Paravan (in Kanyakumari district and Shenkottah
taulk of Tirunelveli district).
58.
Pathiyan (in Kanyakumari district and
Shenkottah taulk of Tirunelveli district).
59.
Pulayan, Cheramar
60.
Puthirai Vannan
61.
Raneyar
62.
Samagara
63.
Samban
64.
Sapari
65.
Semman
66.
Thandan (in Kanyakumari district and Shenkottah
taulk of Tirunelveli district).
67.
Thoti
68.
Tiruvalluvar
69.
Vallon
70.
Valluvan
71.
Vannan (in Kanyakumari district and Shenkottah
taulk of Tirunelveli district).
72.
Vathiriyan
73.
Velan
74.
Vetan (in Kanyakumari district and Shenkottah
taulk of Tirunelveli district).
75.
Vettiyan
76.
Vettuvan(in Kanyakumari district and Shenkottah
taulk of Tirunelveli district).
THE CONSTITUTIN (SCHEDULED TRIBES) ORDER, 1950 AS AMENDED BY
THE SCHEDULED TRIBES ORDERS (AMENDMENT) ACT, 1976
No. 108 OF 1976.
In exercise of the
powers conferred by clause (1) of Article 342 of the Constitution of India, the
President, after consultation with the Governors and Rajpramukhs of the States
concerned, is pleased to make the following order, namely :-
1. This Act may be
called the Scheduled Tribes Orders (Amendment) Act, 1976. It shall come into
force on the 27th July 1977.
2. The tribes or tribal
communities, or parts of, or groups within, tribes or tribal communities,
specified in Parts I to XVI of the Schedule to this Order, shall in relation to
the states to which those parts respectively relate, be deemed to be Scheduled
Tribes so far as regards members thereof resident in the localities specified
in relation to them respectively in those parts of that Schedule.
3. Any reference in
this order to a state or to a district or other territorial division thereof
shall be construed as a reference to the state, district or other territorial
division as constituted on the 1st day of May 1976.
THE SCHEDULE (Scheduled Tribes)
PART XIV – TAMIL NADU.
1.
Adiyan
2.
Aranadan
3.
Eravallan
4.
Irular
5.
Kadar
6.
Kammara (excluding Kanayakumari district and
Shenkottah taulk of Tirunelveli district)
7.
Kanikaran, Kanikkar (in Kanyakumari district
and Shenkottah taulk of Tirunelveli district).
8.
Kaniyan, Kanyan
9.
Kattunayakan
10.
Kochu Velan
11.
Konda Kapus
12.
Kondareddis
13.
Koraga
14.
Kota
(excluding Kanyakumari district and Shenkottah taulk of Tirunelveli district).
15.
Kudiya, Melakudi
16.
Kurichchan
17.
Kurumbas (in the Nilgiris district)
18.
Kurumans
19.
Maha Malasar
20.
Malai Arayan
21.
Malai Pandaram
22.
Malai Vedan
23.
Malakkuravan
24.
Malasar
25.
Malayali (in Dharmapuri, North Arcot,
Pudukottai, Salem , South
Arcot and Tiruchirappalli districts)
26.
Malayakandi
27.
Mannan
28.
Mudugar, Muduvan
29.
Muthuvan
30.
Pallayan
31.
Palliyan
32.
Palliyar
33.
Paniyan
34.
Sholaga
35.
Toda (excluding Kanyakumari district and
Shenkottah taulk of Tirunelveli district).
36.
Uraly.
Subscribe to:
Posts (Atom)