- விபரம்:
- வருகை: 409
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரின் துணிகளைச் சலவை செய்து கொடுத்தல், அவர்களின் பிற தேவைகளை செய்து கொடுத்தல் போன்ற தொழில்களைச் செய்யும் சமுதாயத்தினராக, தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களிலும் ஒடுக்கப்பட்டவர்களாக புதிரை வண்ணான் சமுதாயத்தினர் இருந்தனர். இந்த சமுதாயத்தினர் சமூக, பொருளாதார நிலைகளில் இன்னும் தாழ்ந்த நிலையிலேயே இருந்து வருகின்றனர்.
புதிரை வண்ணார் நல வாரியம்
தமிழ்நாடு அரசு தற்போது புதிரை வண்ணார் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரியம் எனும் பெயரில் தனி வாரியம் ஒன்றை அமைத்துள்ளது. இதில்
தலைவர்
புதிரை வண்ணார் நல வாரியம்
தமிழ்நாடு அரசு தற்போது புதிரை வண்ணார் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரியம் எனும் பெயரில் தனி வாரியம் ஒன்றை அமைத்துள்ளது. இதில்
தலைவர்
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அமைச்சர்
உறுப்பினர்கள்
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைச் செயலாளர்
- நிதித்துறைச் செயலாளர்
- நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர்
- ஊரகவளர்ச்சித் துறைச் செயலாளர்
- தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறைச் செயலாளர்
- சுகாதாரத் துறைச் செயலாளர்
- பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர்
- பழங்குடியினர் நலத்துறை, தாட்கோ மேலாண் இயக்குநர்
- பேரூராட்சி ஆணையர்
-ஆகியோர் அலுவல் சார்ந்த உறுப்பினர்களாக இருப்பார்கள்.
வாரியப் பணிகள்
வாரியப் பணிகள்
- இச்சமுதாய மக்களின் கல்வி அறிவுநிலை பின்தங்கிய நிலையில் உள்ளதை கணக்கில் கொண்டு இவ்வினத்தை சேர்ந்த அனைத்துக் குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்தல்.
- இச்சமுதாய மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா, தொகுப்பு வீடுகள் கட்டித்தருதல், பொருளாதார திட்டங்களை மானியத்துடன் தருதல் உள்பட பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள் இவ்வாரியம் மூலம் செயல்படுத்தப்படும்.
- புதிரை வண்ணார் இன மக்களின் முன்னேற்றத்துக்காக அரசு மூலம் வழங்கப்படும் அனைத்து நலத்திட்டங்களும் மற்றும் உதவிகளும் சிறப்பான முறையில் தங்கு தடையின்றி கிடைப்பதற்கும் இதனை கண்காணிக்கும் வகையில் இவ்வாரியம் செயல்படும்.
No comments:
Post a Comment