புதிய தகவல்:
பல்வேறு வகையான
கொடுமைகளிலிருந்தும் மீளமுடியாதவர்களாக, தாழ்த்தப்பட்டவர்களிலேயே மிகவும் மோசமான
தாழ்த்தப்பட்டவர்களாக இன்றுவரை புதிரை வண்ணார்கள் வாழ்ந்து வருகின்றனர்.
புதிரை வண்ணார்களைப் பார்த்தாலே தீட்டு எனச் சொல்லி அவர்களின் அடிப்படைத் தேவைகளையும் மற்றும் மேல் சாதியினர் கட்டளையிடுகின்ற கூலியற்ற வேலைகளையும் இரவிலேயே செய்ய வைத்து, பகலில் மற்ற சமூக மக்களோடு பழகத் தடைவிதித்து, தொடர்ந்து அவர்களை ஒடுக்கிவைத்துள்ளது. இதை அம்பேத்கர் தனது பேச்சும் எழுத்தும் தொகுதி- 6 பக்கம் 126இல் உறுதிப்படுத்தியுள்ளார். சென்னை மாகாணச் சட்ட மன்றத்தில் 1932ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த நீதிக்கட்சி, புதிரை வண்ணார்மீதான வன்முறையைத் தடுக்கவும் சமூகத்திலிருந்து அவர்களை ஒதுக்கிவைப்பதையும் சட்டபூர்வமாகத் தடைசெய்ததோடல்லாமல் இச்சட்டத்தை மீறுபவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவர் என அறிவித்து, பார்த்தாலே தீட்டு என்ற கொடுமையிலிருந்து புதிரை வண்ணார்கள் மீள வழிவகுத்தது. ஆனாலும், மற்றைய சமூகக் கொடுமைகள், பிரச்சினைகள் தொடரவே செய்தன. சமூகத்தில் இன்றும் பல்வேறு வகையான கொடுமைகளிலிருந்தும் மீளமுடியாதவர்களாக, தாழ்த்தப்பட்டவர்களிலேயே மிகவும் மோசமான தாழ்த்தப்பட்டவர்களாக இன்றுவரை புதிரை வண்ணார்கள் வாழ்ந்து வருகின்றனர். பிரபல ஆங்கில வார ஏடான தெஹல்காவில் 30.07.2005 முதல் 27.08.2005 வரை சென்னை நிருபரான பி. சி. வினோஜ் குமார், புதிரை வண்ணார்கள் குறித்து எழுதிய கட்டுரையின் தாக்கத்தின் மூலம் அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கையின் காரணமாகத் தமிழ்நாட்டில் உள்ள புதிரை வண்ணார்கள் மற்றும் அவர்களின் சமூக விடுதலைக்காகக் களப்பணி ஆற்றிவரும் தலைவர்களை அழைத்துப் பேசி அவர்களுக்கான பிரச்சினைகள் குறித்துப் பதிவுசெய்யப்பட்டது. புதிரை வண்ணார்கள் இன மக்களுக்கே என்று உள்ள பல்வேறு பிரத்யேகமான பிரச்சினைகளான கல்வி, இட ஒதுக்கீடு, சாதிச் சான்று, அரசு, தனியார் வேலைவாய்ப்புகள், தாட்கோ கடன் வசதி, தீண்டாமை, தீண்டாமைக்குள் தீண்டாமை, பெண்கள்மீது நிகழ்த்தப்படும் பாலியல் வல்லுறவு ஆகியவற்றைச் சரிசெய்ய அரசு முயற்சிகள் எடுக்க வேண்டும் எனச் சலவைத் தொழிலாளர் நலக்குழு, அக்கறையோடு கேட்டுக்கொள்கிறது. இரண்டாம் செப்பேடு ஒரே ஏட்டுடன் முழுமையின்றி உள்ளது. எனினும், இரண்டும் ஒரே காலமாகும். இரண்டு செப்பேடுகளிலும் தொடக்கத்தில் சிவலிங்கமும் நந்தியும் சூலமும் சூரிய சந்திர உருவங்களும் வீரமணவாளர் தேவியருடன் கூடிய சிற்பங்களும் துணிவெளுக்கும் கல்லும் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. பின்னர் விஜயநகர அரசர் மெய்க்கீர்த்தியும் கிருஷ்ணதேவராயர் மற்றும் அச்சுதராயர் காலத்தில் மடம் புதுப்பிக்கப்பட்ட விவரங்களும் உள்ளன. வண்ணார் ஜாதி தோற்றத்திற்கான புராண வரலாறு இதில் கூறப்பட்டுள்ளது. தட்சணையும் அவனுக்கு உதவியாக வேள்வி செய்த தேவர் மற்றும் தேவிகளை அழிக்க, வீரபத்திரரைச் சிவபெருமானும், காளியை உமையம்மையும் தோற்றுவித்தனர். அவர்கள் அவ்வாறே அழித்தனர். தேவர்களை வீரபத்திரரும், தேவிகளைக் காளியும் அழிக்கின்றனர். பின்னர் இறந்த தேவர், தேவிகளுக்கு மீண்டும சிவன் உயிர்கொடுத்தபோது அவர்கள் மீதிருந்த உதிரம்போக, வருணனை மழை பெய்யும்படி சிவன் ஆணையிட்டார். வருணன் மழைபெய்தும் குருதிக்கறை ஆடைகளில் இருந்து போகாததால், வீரபத்திரர் மரபில் ஒருவர் தோற்றுவிக்கப்பட்டு வீரன் எனப் பெயரும் சூட்டி ஆடைகளை வெளுக்க அனுப்பி வைக்கப்படுகிறார். இந்த வண்ணார் மரபில் திருக்குறிப்புத் தொண்டர் பிறந்தார். இவருடைய மரபில் வீரமணவாளர் பிறந்து அவர்தம் பெண்ணை அண்ணாமலையாருக்குத் தந்தார். பிறகு வண்ணாரின் சிறப்புகள் விரிவாகச் செப்பேட்டில் கூறப்படுகின்றன. சக ஆண்டு 1445ம் ஆனந்த ஆண்டும் பொருந்திய (கி.பி., 1593) காலத்தில் சிதம்பரம் கோவிலை வழிபட கிருஷ்ணதேவராயர் வருகிறார். அவருடன் அவருடைய துணிகளை வெளுக்கும் குருவப்ப வண்ணானும் சிதம்பரம் வருகிறார். சிதம்பரத்தில் பூர்வீகமாக இருந்து வரும் வண்ணார் மடம் அழிந்த நிலையில் இருப்பதைக் கேட்டு அவரும் தகுந்த ஆணை பிறப்பித்தார். இதற்காக கூட்டப்பட்ட சிறப்புக்கூட்டத்தில் எல்லா ஜாதியினரும் பங்கேற்றனர். அதன்படி, கீழைக்கோபுர வாசலில், வடதுண்டில் இண்டந்தெரு வீதியின் கீழ் சிறகில் சேக்கிழையான் என்பவரிடம் மனை வாங்கி மணவாளப் பிள்ளையார் கோவிலும் மடமும் கட்டப்பட்ட விவரம் இந்தச் செப்பேட்டில் உள்ளது.கிருஷ்ண தேவராயருக்குப் பின், அச்சுதராயர் ஆட்சிக்கு வந்தபோதும் மடத்திற்கான கட்டளை ஒழுங்காக, வராததால் முறையீடு செய்து முடிவு எடுக்கப்பட்ட தகவலும் உள்ளன. அச்சுதராயர் கல்வெட்டுகள் நடராசர் கோவிலில் உள்ளன.வண்ணார் மரபில் வந்த பலர் கூடி மகமை வழங்க உடன்பட்டுச் செப்பேடும் வெட்டுகின்றனர். ஒவ்வொரு வண்ணார்க்குடியும் குடிக்கொரு பணமும் மணப்பெண்ணும் மணமகனும் திருமணத்தின் போது, தலா ஒரு பணமும் தருவது என்றும் முடிவு செய்யும் தகவல் உண்டு. தற்போது மடம் சிதைந்தபடி உள்ளது. இத்தனை தகவல் கூறும் இருசெப்பேடுகளும் பரங்கிப்பேட்டை ஆசிரியர் கு.செல்வராசன் பாதுகாப்பில் உள்ளன. மேலும் இவைகள் குறித்து கிருஷ்ணமூர்த்தி ஆய்வு செய்து வருகிறார்.-
Ref :
Chairman and President Mr. E.Vengadasalam IAS
Tho. Nainar.
GENERAL SECRETARY, TAMILNADU VANNAR FEDERATION CELL: 9443280111 E-MAIL: vannarcommunity@gmail.com |
Thursday, 8 March 2012
" புதிரை வண்ணான் " தெரிந்த இனம் தெரியாத சேதி
Subscribe to:
Post Comments (Atom)
VANNAR,PUTTHIRA VANNAR,DHOBI,WASHERMAN HISTORY WHAT U REPORTED IS VERY HELPFUL.LOT OF THANKS
ReplyDeleteBY AMBUR K.P.R
i am the puthirai vannan community student in pondicherry central university
ReplyDeletei want more information to this topicபுதிரை வண்ணார்
vignarajan17@gmail.com
புதிரை வண்ணான் தமிழர்கள் தானா?
ReplyDeleteஎங்கள் பகுதியில் தெலுங்கு வண்ணார்கள்(MBC)பட்டியல் SC பட்டியலில் உங்களுக்கான அரசு வேலை உட்பட பல சலுகைகளை பெற்று வாழ்ந்து வருகிறார்கள். அணுகுகினால் விபரம் தருகிறேன்
ReplyDeleteSend your phone number
Delete